Sunday, August 19, 2007

என் போதிமரம்




என்னுள் இருந்த
உன்னை
உணரச் செய்தாய்.

நெஞ்சுக்குள் நீயே
சிறு விதையாய்
விழுந்தாய்!

உயிரை நீராய்
அழகாய்
உருகச் செய்தாய்!

சிறு பொழுதினுள்
சிந்தனைக் கெட்டாத
போதிமரமாய்
விரிந்து நின்றாய்
என்னுள்!

உனக்குள்
நானே போதிமரம்!
எதை தேடுகிறாய்
இன்னும் வெளியே?
கடந்து
உள்ளே வா!

No comments: