Saturday, August 18, 2007

நினைவுகள் - 21

....பின்னொரு நாளில்
சந்தித்துக் கொண்டபோது
நீ கேட்டாய்...
"என்னை நினைவிருக்கிறதா?"
புன்னகைத்து விட்டு
நெஞ்சோடு நான்
சொல்லிக் கொண்டேன்
"இதுவரை இருப்பதே
உன் நினைவுகளால்தான்".
கலங்கிய கண்கள்
கண்டு தெரிந்து கொண்டேன்
அது உனக்கும் கேட்டது என்று!.

No comments: