சொர்க்கத்தில்
ஒரு தேவதைக்கு
பிரியா விடை!
நட்சத்திர தோழிகளின்
கண்ணீர் மழையில்
அழகாய் நனைகிறது பூமி!
வெள்ளை நிலவின்
உடைந்த சிறு துண்டு போல
பூமிக்கு வந்து சேர்ந்தது
கைகால் முளைத்த
அந்த குட்டி நிலவு!
நிலவில் பிறந்த தேவதையே!
உன்னைப் பார்த்ததும்
உறுதி செய்து கொண்டேன்....
பூமிக்கு வந்து சேரும்
தேவதைகளுக்கு
சிறகுகள் இருப்பதில்லையென்பதை!
வெள்ளி நிலவே!
நீ பிறந்ததும்
அறையில் இருந்த வெளிச்சம்
அந்த நிலவில் கூட இல்லை!
ஜன்னலோரம்
அங்கென்ன சிறு வெளிச்சம்?
மின்மினிப் பூச்சிகளா?
இல்லை
விண்மீன் கூட்டங்களா?
நட்சத்திரங்கள்
உன்னைக் காண
புறப்பட்டத்தில்
வானில் இன்று
போக்குவரத்து நெரிசல்!
உன் முதல் அழுகை!
சில நொடிகள் நின்று
எட்டிப் பார்த்து
புன்னகைத்து விட்டு
சுற்றத் தொடங்கியது
பூமி!
தரையெல்லாம்
ஏங்கி கிடக்கிறது...
பாதம் பதித்து
நீ எப்போது
நடை பழகுவாயென்று!
இனி
சூரியன் தினமும்
காத்திருக்கும்.
நீ கண் திறந்தபின்
உதிப்பதற்கு!
பூமிக்கில்லை
இனி அமாவாசை.
வான் நிலா மறைந்தாலும்
இந்த தேன் நிலா
இருக்கிறாளே!
........ இன்னும் வளர்வாள்
Tuesday, August 7, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment