Wednesday, July 11, 2007

மௌனம் வேண்டாம்

கண் திறந்த சூரியன்
தன் ஒளி கைகளால்
இதமாய்
தேகம் வருடியதும்
மெதுவாய் கண்விழித்து
பூத்துச் சிரிக்கின்றன
மெல்லிய பூக்கள்!

உன் மௌனத்தில்
உயிர்வாடி
உதிர்ந்த இலைச்சருகாய்
கருகித் தவித்து
காத்துக் கிடக்கிறது
இந்த சூரியன்
பூவே - உந்தன் காலடியில்!

கண்டுகொள்ளாமல்
கண்மூடி நிற்பதே
உன் நியதியோ?
மெல்லிய பூவே...
மௌனம் வேண்டாம்
பதில் சொல்.

No comments: