Tuesday, July 10, 2007

இனி ஒரு விதி செய்வோம்

இனி ஒரு விதி செய்வோம்
தனி மனிதனுக்கு
உணவு இல்லை என்றால்
ஜகத்தினை அழித்திடுவோம்
இது பாரதியின் விதி

அழித்திடுவோம் என்ற
பயமோ கடவுள்களுக்கு?
பாரதிக்கு மறு ஜென்மம் மறுக்கப்பட்டது.

யாருக்கு தெரியும்
இன்று பசியின் கொடுமைக்கு
கனவுகளையும் கவிதைகளையும்
மறந்துவிட்ட பாரதிகள்
எத்தனை பேர் என்று?

No comments: