Wednesday, July 25, 2007

உயிர் தின்னிகள்!



உயிரோடு தின்றுவிட்டது பசி!
உயிரின் ஒருதுளியை மட்டும்
விட்டுச்சென்றது அதன் கொடூரம்!


ஐந்தறிவு ஜீவன்
காத்திருக்கிறது பொறுமையுடன்...
நான் இறக்கும் நேரத்திற்க்காகவும்...
பின்னர்
வலி தெரியாமல்
என்னை தின்பதற்கும்!


அந்த இரக்கத்திற்கு
என் உடலையே
அதற்கு உணவாக்குவதில்
மகிழ்கிறேன்.


உணவில்லாமல் செத்தவனே
இங்கு உணவாவதுதான்
ஆச்சரியம்!


ஓ மனிதர்களே!
பிணங்களை தின்பதால்
இந்த கழுகுகளை
பிணம் தின்னி என்கிறீர்களா?


பசிக்காக உண்ணாமல்
ருசிக்காக உண்ணும்
நீங்களும்
என் சாவுக்கு
காரணமில்லையா?


பசியின் பசிக்கு
எங்களை உயிரோடு
தின்னக்கொடுத்த உங்களை
என்னவென்று அழைப்பது....

உயிர் தின்னிகள் என்றா?

1 comment:

Jeevan said...

It’s hurting the heart. Touching lines buddy, in every post... what a cruelty visible in the pictures.

'rusikkaga vendam endrum,
viruppam illathathaal vendam endru solli,
unavugalai veenadippavargal,
ivargalathu nelaimaiyai oru murai neenaippargala.'