Wednesday, July 18, 2007

ஓர் வேண்டுகோள்....




அமிர்தம் வேண்டி
மலையை கடைந்தனர்
தேவர்களும் அசுரர்களும்
சாகாவரம் பெற!

சாகா வரமும் வேண்டாம்
அமிர்தமும் வேண்டாம்
அரை சாண் வயிறு காய்க்கிறது
அழுதழுது உயிரும் கரைகிறது!

கடவுள்களுக்கும்
மனிதர்களுக்கும்
ஓர் வேண்டுகோள்....

உதவுங்கள்!

பழையது கூட போதும்
பிரியும் முன்
நனைத்துக்கொள்கிறோம்
ஒருமுறை எங்கள் உயிரை!

No comments: