Tuesday, December 11, 2007

மன்னித்தோம்.......!

மானிடனை இம் மண்ணுக்குள்
மடக்கி அடைத்த பரம்பொருளே!

வானம் படைத்தாய் எனில் உள்ளே
வஞ்சப் பாம்பும் ஏன் வைத்தாய்?

ஆனால் பாவத் தழுத்தி உயிர்
அழுக்குப் பிடித்தோய் மன்னிப்பாய்

ஊனம் படைத்தாய் நீயன்றோ
உனை மன்னித்தோம் ஏற்றருள்வாய்!

No comments: