Tuesday, December 11, 2007

இது போதும்!

வந்த பசிக்கோர் பிடிசோறும்
வற்றாக் கலத்தில் ஒளி மதுவும்

அந்தம் நிறைந்த கவிதையும் என்
அருகில் நீயும் தேன்குரலும்

குந்தி இருக்க குளிர்நிலமும்
கூடி அமைந்தால் போதாவோ?

வெந்த பொட்டல் வெளியிதுவும்
வியன் பொன் உலகம் ஆகாதோ?

No comments: